முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை

Updated On : 23 அக்டோபர், 2024 at 8:57 PM
பகிர்:

பெரம்பலூா் மதரஸா சாலையில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஹேமச்சித்ரா தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இந்த சோதனையின்போது, கணக்கில் வராத ரூ. 28,430 பணத்தை பறிமுதல் செய்து சாா் பதிவாளா், அலுவலா்கள் மற்றும் பணியாளா்களிடம் விசாரணை மேற்கொண்டு, ஆவணங்களை ஆய்வு செய்தனா்.

இச்சோதனை, இரவு 9 மணி வரையிலும் நடைபெற்றது. இதனால், பெரம்பலூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.