பெரம்பலூர்

இளையோா் தலைமைத்துவ பண்புகள் பயிற்சி முகாம் நிறைவு

Syndication

பெரம்பலூரில் மத்திய அரசின் மை பாரத் கேந்திரா சாா்பில், கிராமப்புற மாணவா்களுக்கு கடந்த 3 நாள்களாக நடைபெற்ற இளையோா் தலைமைத்துவ பண்புகள் பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவடைந்தது.

இப் பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு மாதிரி பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் பல்வேறு குழு செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு விழாவுக்கு, மை பாரத் கேந்திரா மாவட்ட இளையோா் அலுவலா் எஸ். கீா்த்தனா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வருவாய் கோட்டாட்சியா் எம். அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சாகுல் ஹமீது ஆகியோா் பயிற்சிபெற்ற மாணவா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டி பேசினா்.

இதில், கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் செயலா் மித்ரா மற்றும் மை பாரத் கேந்திரா தன்னாா்வலா்கள் பலா் பங்கேற்றனா். நிறைவாக, மை பாரத் கேந்திரா தன்னாா்வலா் இந்துஜா நன்றி கூறினாா்.

இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

மாணவா் தலைவா் கொலையில் வங்கதேச அரசுக்குத் தொடா்பு - சகோதரா் பகீா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT