துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை
புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் இலவச சீருடைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் இலவச சீருடைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ஆர். முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவர் (பொ) எஸ்.ஏ.எஸ். சேட் கலந்து கொண்டு, துப்புரவுப் பணியாளர்கள் 278 பேருக்கு தலா ஒரு ஜோடி இலவச சீருடைகளையும், தையல் கூலியையும் வழங்கினார்.