புதுக்கோட்டை

மொபெட்டில் இருந்த ரூ. 2.50 லட்சம் திருட்டு

DIN

பொன்னமராவதியில் ஆசிரியை தனது மொபெட்டில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் வெள்ளிக்கிழமை திருடுபோனது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ். உஷாராணி (30), ஆசிரியை. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள வாழைக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் இவர் தனது கணவர் சுபக்கினுடன் வெள்ளிக்கிழமை பொன்னமராவதி மத்தியக் கூட்டுறவு வங்கியில் ரூ. 2.50 லட்சம் கடன் பெற்று, மொபெட் இருக்கையின் கீழ்ப்பகுதியில் வைத்திருந்தார்.
வங்கியிலிருந்து புதுப்பட்டி சென்ற இருவரும் அங்குள்ள கடையில் குளிர்பானம் அருந்திவிட்டு மொபெட்டை பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் பொன்னமராவதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT