பொன்னமராவதி ஒன்றியத்தில் பனைமர விதைகள் நடவுப் பணி
பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட 42 ஊராட்சிகளிலும் நடைபெற்றுவரும் பனைமர விதைகள் விதைக்கும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர்
பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட 42 ஊராட்சிகளிலும் நடைபெற்றுவரும் பனைமர விதைகள் விதைக்கும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மதியழகன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அழிவின் விளிம்பில் இருக்கும் பனைமரங்களைப் பாதுகாக்கும் பணியாக பொன்னமராவதி ஒன்றியத்தில் 42
ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மூலம் பனைமர விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அதன்படி திருக்களம்பூர் ஊராட்சியில் கண்மாய் கரையில் பனைமர விதைக்கும் பணியினை பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மதியழகன் தொடங்கி வைத்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய மேற்பார்வையாளர் சக்தி, ஊராட்சி செயலர் சேவுகரெத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதுபோல 42 ஊராட்சிகளிலும் ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.