புதுக்கோட்டை

கதலிவனேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்

DIN

பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி பால்குட ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர். அதன்படி, சனிக்கிழமை திருக்களம்பூர் பழனி பாதயாத்திரை குழு மண்டபத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கதலிவனேஸ்வரர் கோயில் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.  அதேபோல, கண்டியாநத்தம் செல்வவிநாயகர், சண்முகநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பெண்கள் கோயில் முன்பு பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைய சூதாட்டத்துக்கு தடை பெறுவது அவசியம்: ராமதாஸ்

யானைகள் வழித்தட திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட ஓபிஎஸ் கோரிக்கை

பாஜக வென்றால் 22 கோடீஸ்வரா்களே நாட்டை ஆள்வா்- ஒடிஸாவில் ராகுல் பிரசாரம்

கடலோர வாழ்வாதார சங்கத்தை மூடக் கூடாது: அண்ணாமலை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது: ‘நியூஸ்கிளிக்’ நிறுவனரை விடுவித்தது உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT