பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி பால்குட ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர். அதன்படி, சனிக்கிழமை திருக்களம்பூர் பழனி பாதயாத்திரை குழு மண்டபத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கதலிவனேஸ்வரர் கோயில் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். அதேபோல, கண்டியாநத்தம் செல்வவிநாயகர், சண்முகநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பெண்கள் கோயில் முன்பு பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.