புதுக்கோட்டை

அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 2 பேர் கைது

DIN

இலுப்பூரில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்
இலுப்பூரில் இருந்து கீரனூர் மார்க்கமாக இயக்கப்பட்டு வரும் கே 9 என்ற அரசுப் பேருந்து ஓட்டுநரான விளாப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியனை (45) கடந்த பிப். 12 ஆம் தேதி இலுப்பூர் பேருந்து நிறுத்தத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது 2 பேர் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் புங்கினிப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சரண்ராஜ்(26), பொன்னுச்சாமி மகன் பிரபுதேவா(24) ஆகிய 2 பேரும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT