புதுகையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் அருகே காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளைத் தலைவர் ரகுமான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும். புதிய நியமனங்கள் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை நாளாக அறிவிக்க வேண்டும். ஓய்வூதிய திட்டத்தில் சேராத ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதில், சங்கத்தின் தஞ்சை கோட்ட துணைத் தலைவர் எம்.அசோகன், இணைச் செயலாளர் என்.கண்ணம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.