மணல் குவாரி திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் தொடர் போராட்டம்
அறந்தாங்கி அருகே அரசு மணல் குவாரி திறக்க எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (மே 16) முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட கிராமக்கள் முடிவெடுத்துள்ளனர்.
அறந்தாங்கி அருகே அரசு மணல் குவாரி திறக்க எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (மே 16) முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட கிராமக்கள் முடிவெடுத்துள்ளனர்.
அறந்தாங்கி தெற்கு வெள்ளாற்றில் உள்ள அழியாநிலை கிராமத்தில் அரசு மணல் குவாரிக்கு செல்ல சாலை அமைக்கப்பட்ட போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக , அழியாநிலை கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இங்குள்ள ஆற்றில் எஞ்சியிருக்கும் மணலை பாதுகாத்தால் மட்டுமே வரும் காலங்களில் குடிநீர் தட்டுபாட்டை போக்க முடியும். எனவே, புதிய மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதன்கிழமை முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.