குறைதீர் முகாமில் கோரிக்கை தொடர்பாக 250 மனுக்கள்
புதுக்கோட்டையில் நடைபெற்ற குறைதீர் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 250 மனுக்கள் பெறப்பட்டன.
புதுக்கோட்டையில் நடைபெற்ற குறைதீர் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 250 மனுக்கள் பெறப்பட்டன.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கிக் கடனுதவி, பசுமைவீடு, சாலை, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 250 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டன.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.