வைஷ்ணவி தேவி அம்மன் கோயிலில் பொங்கல் விழா
பொன்னமராவதி அருகே வைஷ்ணவி தேவி அம்மன் கோயிலில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே வைஷ்ணவி தேவி அம்மன் கோயிலில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆலவயல் பிடாரம்பட்டியில் உள்ள இக்கோயிலில் கடந்த 13ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முக்கிய விழாவான பொங்கல் விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. வைரம்பட்டி, பிடாரம்பட்டி, மணத்தோண்டி, காத்தரங்கூடம், வடக்கிப்பட்டி, பரமன்கூடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர்.