புதுக்கோட்டை

பொன்னமராவதியில் கிராம அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

கிராமப்புற அஞ்சலக ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி பொன்னமராவதி துணை அஞ்சலகம் முன்பு கிராமிய அஞ்சலக ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி கடந்த 22ஆம் தேதி முதல் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கோட்டத் தலைவர் வி. அடைக்கலம் தலைமை வகித்தார். கோட்டச் செயலர் எஸ். ராமச்சந்திரன்,  மாநிலத் தலைவர் ஜி. ஹரிராமச்சந்திரன்,  கோட்டச் செயலர் எஸ். பாண்டித்துரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  
சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT