கந்தர்வகோட்டை ஒன்றியம், புதுநகர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மனநல தினத்தை முன்னிட்டு மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்கார்ப் இந்தியா மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ ) ப. சுகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்கார்ப் இந்தியா சமூக ஒருங்கிணைப்பாளர் சே .செந்தில்குமார் மனநலம் பற்றி பேசினார். பள்ளி ஆசிரியர்கள் சு . மணிகண்டன், சுசிலா, முத்துமீனா, ஒருங்கிணைப்பாளர்கள் தி . சேகர் , டி. சிவரஞ்சனி , எஸ் . கவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.