முகப்பு
புதுக்கோட்டை

மேலைச்சிவபுரியில் மஞ்சுவிரட்டு

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி பட்டுவயல் பகுதியில் மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:47 AM
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி பட்டுவயல் பகுதியில் மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மஞ்சுவிரட்டில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் அடக்கினர். 
சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த திரளான பொதுமக்கள் மஞ்சுவிரட்டைக் கண்டு ரசித்தனர். பொன்னமராவதி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.