மேலைச்சிவபுரியில் மஞ்சுவிரட்டு
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி பட்டுவயல் பகுதியில் மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி பட்டுவயல் பகுதியில் மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மஞ்சுவிரட்டில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் அடக்கினர்.
சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த திரளான பொதுமக்கள் மஞ்சுவிரட்டைக் கண்டு ரசித்தனர். பொன்னமராவதி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.