சேலம் சோனா கல்விக் குழுமம் சார்பில் பொன்னமராவதியில் சோனா யுக்தி திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. .
சேலம் சோனா கல்விக் குழுமத்தின் சார்பில் கடந்த 2012 முதல் சோனா யுக்தி திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மூலம் நலிவடைந்த பெண்கள், மாணவர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. தற்போது, புதுகை மாவட்டம், பொன்னமராவதியில் 51 ஆவது திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. மையத்தை தலைமை நிர்வாக அதிகாரி சொக்கு வள்ளியப்பா, முதன்மை செயல் அலுவலர் முரளிதர் ஆகியோர் தொடக்கி வைத்தனர். விழாவில், முன்னாள் நீதிபதி செல்வம், இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியர் அகிலேஷ், பழனியப்பா செட்டியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்விக் குழுமத் தலைவர் வள்ளியப்பா முன்னிலை வகித்தார். இறுதியில், நன்றியுரையாற்றினார்.