புதுக்கோட்டை

விபத்தில் தொழிலாளி பலி: தனியார் பேருந்து சிறைபிடிப்பு

பொன்னமராவதி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் ஹோட்டல் தொழிலாளி உயிரிழந்தார்.

DIN

பொன்னமராவதி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் ஹோட்டல் தொழிலாளி உயிரிழந்தார்.  இதையடுத்து, பொதுமக்கள் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கோவனூரைச் சேர்ந்தவர் ப. சங்கர். புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில்  செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது செவலூர் விளக்கு அருகே எதிரே வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 
இதில் பலத்த காயமடைந்த சங்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, அதே நிறுவனத்தைச் சார்ந்த பேருந்தை சிறைப்பிடித்தனர். தொடர்ந்து பொன்னமராவதி வட்டாட்சியர் ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT