புதுக்கோட்டை

நிவாரணப் பொருள் வழங்கக் கோரி கோவிலூரில் சாலை மறியல்

ஆலங்குடி அருகிலுள்ள கோவிலூரில், அரசின் புயல் நிவாரணப்பொருள்களை வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

DIN

ஆலங்குடி அருகிலுள்ள கோவிலூரில், அரசின் புயல் நிவாரணப்பொருள்களை வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின் போது ஆலங்குடி வட்டத்தில்   மரங்கள், நெல், வாழை. சோளம் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்தன.  புயல் பாதிப்பு நிகழ்ந்து 9 மாதங்களுக்கு மேலாகியும்,  கோவிலூர் பகுதி மக்களுக்கு நிவாரணப்பொருள்கள் இதுவரை வழங்கப்படவில்லையாம். 
இந்நிலையில், மேலக்கோட்டையில் நிவாரணப்பொருள்கள் கொடுப்பதாக செவ்வாய்க்கிழமை தகவல் பரவியதையடுத்து, ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். ஆனால், அங்கு ஒரு சிலருக்கு மட்டும்தான் நிவாரணப்பொருள்கள் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கோவிலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற ஆலங்குடி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி,  மறியலில் ஈடுபட்டோரை  கலைந்து போகச் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT