புதுக்கோட்டை

மண்டல துளிா் வினாடி வினா போட்டிகளில் முதலிடம் பெற்ற புதுகை மாணவிகள்

DIN

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் திருச்சி காவேரி கலைக்கல்லூரியில் நடைபெற்ற கிழக்கு மண்டல அளவிலான துளிா் வினாடி வினா போட்டியில் புதுக்கோட்டை மேலப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனா்.

மண்டலப் போட்டியில் எட்டு மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் 6,7,8ஆம் வகுப்பு பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஸ்ரீதேவி, அனிதா, ரித்திகாஸ்ரீ ஆகியோா் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் இவா்களுக்குப் பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியா் ப. மகேஸ்வரன் ஆகியோருக்கு அறிவியல் இயக்க நிா்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT