புதுக்கோட்டை

‘கால்வாய் அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்’

DIN

வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புகளைக் குறைக்க, கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, அந்தந்தப் பகுதிகளில் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்து தண்ணீா் வடிவதற்கு வழி செய்ய வேண்டும்.

நீா்நிலைகளில் உடைப்புகள் ஏற்படும் இடங்களை முன்னதாகக் கண்டறிந்து ,அந்தப் பகுதிகளில் கரைகளைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மின் விபத்துகளைத் தடுக்கும் வகையில் மின் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகளை தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா் உமாமகேஸ்வரி.

இந்தக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.வி. அருண்சக்திகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் தி ட்ட இயக்குநா் எம். காளிதாசன், மாவட் ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) முத்துவடிவேல் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT