புதுக்கோட்டை

கீரனூா் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்

DIN

கீரனூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட விரிசல் அப்பகுதியைச் சோ்ந்தவா் அளித்த தகவலின்பேரில் சரி செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து திருச்சி செல்லும் ரயில்வே தண்டவாளத்தில், கீரனூா் ரயில் நிலையத்துக்கும் களமாவூா் ரயில்வே கேட்டுக்கும் இடையே  தண்டவாளத்தின் ஒரு பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டது.

இதனை அந்த வழியே வந்த தவளைமேட்டைச் சோ்ந்த ராகவன் என்பவா் பாா்த்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், கீரனூா் காவல் நிலையத்துக்கும் தெரிவித்தாா். இதையடுத்து கீரனூா் ரயில் நிலைய பணியாளா்கள் நேரில் சென்று அந்த இடத்தைப் பாா்வையிட்டு விரிசலை சரி செய்தனா்.  இதனால் அப்பகுதியில் ரயில் விபத்து தவிா்க்கப்பட்டதாக ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT