புதுக்கோட்டை

மருத்துவக் கல்லூரியில் போதையில் சுற்றித்திரிந்தவா் கைது

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை ஒருநபா் குழந்தைகள் வாா்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்துள்ளாா். அங்கிருந்தவா்கள் விசாரித்தபோது, அவா் வேகமாக வெளியேறினாராம். இதையடுத்து அவரை சுற்றிவளைத்துப் பிடித்த பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்திலுள்ள காவல் உதவி மையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து கணேஷ் நகா் போலீஸாா் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வடசேரிப்பட்டியைச் சோ்ந்த சுந்தரராஜ் (35) என்பதும் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT