புதுக்கோட்டை

பாரதி கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா

DIN

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தேசிய இளைஞர் தினவிழா கொண்டாட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் கே.ஆர். குணசேகரன், அறங்காவலர்கள் கே. ரெங்கசாமி , அ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் துணை முதல்வர் மா. குமுதா தொடக்கவுரையாற்றினார்.  விழாவில் சிறப்பு அழைப்பாளராக வாசகர் பேரவையின் மாவட்டச் செயலர் பேராசிரியர் சா.விஸ்வநாதன் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கிப் பேசினார். முன்னதாக நடைபெற்ற பேச்சுப்போட்டியில் து. பிரபா, ஐ. புஷ்பலதா, எம்.ஜாஸ்மின் பேகம், கட்டுரைப் போட்டியில் எஸ்.கெளசிகா, ஐ.பவித்ரா, ஏ.இளமதி ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். உதவிப்பேராசிரியர் என். மாதவி வரவேற்றார். எம். ஐஸ்வர்யா நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT