புதுக்கோட்டை

அறந்தாங்கி: 350 கிலோ நெகிழிப்பொருள்கள் பறிமுதல்: ரூ.35 ஆயிரம் அபராதம்

DIN

அறந்தாங்கி நகராட்சி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையில் 350 கிலோ எடையுள்ள நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை விற்பனை செய்தவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
அறந்தாங்கி நகராட்சி ஆணையர் ஆர். வினோத் தலைமையில், நகராட்சி சுகாதார அலுவலர் த.முத்துகணேஷ், துப்புரவு ஆய்வாளர் சி.சேகர், உள்ளிட்ட அலுவலர்கள் அறந்தாங்கி நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஜவுளி நிறுவனங்கள் மற்றும் பலசரக்கு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த எடை 350 கிலோ ஆகும். இதைத்தொடர்ந்து, வியாபாரிகளிடமிருந்து ரூ. 35 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு நகராட்சி கரூவூலத்தில் செலுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT