புதுக்கோட்டை

அறந்தாங்கி: 350 கிலோ நெகிழிப்பொருள்கள் பறிமுதல்: ரூ.35 ஆயிரம் அபராதம்

அறந்தாங்கி நகராட்சி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையில் 350 கிலோ எடையுள்ள நெகிழிப்

DIN

அறந்தாங்கி நகராட்சி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையில் 350 கிலோ எடையுள்ள நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை விற்பனை செய்தவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
அறந்தாங்கி நகராட்சி ஆணையர் ஆர். வினோத் தலைமையில், நகராட்சி சுகாதார அலுவலர் த.முத்துகணேஷ், துப்புரவு ஆய்வாளர் சி.சேகர், உள்ளிட்ட அலுவலர்கள் அறந்தாங்கி நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஜவுளி நிறுவனங்கள் மற்றும் பலசரக்கு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த எடை 350 கிலோ ஆகும். இதைத்தொடர்ந்து, வியாபாரிகளிடமிருந்து ரூ. 35 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு நகராட்சி கரூவூலத்தில் செலுத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

5,000 அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜிய மாணவர் சேர்க்கை!

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

SCROLL FOR NEXT