நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றவுள்ள பணியாளர்களுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை கணினி மூலம் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 17ஆவது மக்களவைக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 1,537 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பணியாற்றுவதற்கான பணியாளர்கள் ஒதுக்கீடு செய்வதற்கான பணி கணினி மூலம் வியாழக்கிழமை செய்யப்பட்டது. இப்பணிகளை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, தேர்தல் தனி வட்டாட்சியர் திருமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.