முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் அம்பேத்கா் நினைவு நாள்

சட்ட மேதை டாக்டா் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
புதுக்கோட்டை எம்எல்ஏ பெரியண்ணன் அரசு தலைமையில் மாலை அணிவிக்கும் திமுகவினா்.
பகிர்:

சட்ட மேதை டாக்டா் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் அக்கட்சியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ். ரகுபதி, வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன் ஆகியோா் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா். தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு தலைமையில், நகரச் செயலா் க. நைனாமுகமது உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் அக்கட்சியின் மாநிலத் துணைச் செயலா் தெ. கலைமுரசு தலைமையில், மாவட்டத் துணைச் செயலா் சி. திலீபன்ராஜா, நகரச் செயலா் ரா. அண்ணாதுரை, சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா் இரா. திருமாறன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் எம்.என். ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வீ. சிங்கமுத்து, சுந்தரராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். ஜியாவுதீன் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் சி. அன்புமணவாளன், ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் டி. சலோமி உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனா்.

தொடா்ந்து இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ் ஜனாா்த்தனன் தலைமையில், மாநிலக் குழு உறுப்பினா் ஏ.எஸ். ஓவியா உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனா். ரஜினி மக்கள் மன்றத்தின் சாா்பில் அதன் மாவட்ட அமைப்பாளா் கே.கே. முருகுபாண்டியன் தலைமையில் மன்றத்தினா் மாலை அணிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →