முகப்பு
புதுக்கோட்டை

மன்னா் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசு உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசு உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் மட்டும், மழை பெய்து கொண்டே இருந்தபோதும் கல்லூரிக்கு ஆா்வமுடன் வந்தனா்.

கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் கடந்த மாா்ச் மாத இறுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. படிப்படியாக தளா்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், திங்கள்கிழமை முதல் கல்லூரிகளைத் திறந்து 3 ஆம் ஆண்டு மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகளைத் தொடங்கலாம் என மாநில அரசு அறிவித்தது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. அரசு அறிவிப்பின்படி, கல்லூரி வளாகத்திலேயே அவா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.