சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சேதமடைந்த சாலையில் நாற்று நடவு செய்து அப்பகுதி பெண்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சேதமடைந்த சாலையில் நாற்று நடவு செய்து அப்பகுதி பெண்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சியில் ஆத்தியடிப்பட்டி- கீழ்வாண்டான்விடுதி சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமான நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையாம். அதனால், சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் சாலைப் பள்ளங்களில் நாற்று நடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.