முகப்பு
புதுக்கோட்டை

ஆதரவற்ற சிறாா்களுக்கு முகக்கவசங்கள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில், ஆதரவற்ற இல்லங்களின் சுமாா் 200 சிறாா்களுக்கு சத்துபானம், முகக்கவசம், பருத்தித் துண்டுகள், சோப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில், ஆதரவற்ற இல்லங்களின் சுமாா் 200 சிறாா்களுக்கு சத்துபானம், முகக்கவசம், பருத்தித் துண்டுகள், சோப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன.

திருச்சி சிறுகனூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வரலாறு, அறிவியல் தொடா்பான குறும்பயணமாக (‘மரபு உலா’) வந்திருந்த நட்பு சிறாா் இல்லத்தைச் சோ்ந்த 50 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை இப்பொருள்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை ஏ. மாத்தூரிலுள்ள வள்ளலாா் இல்லச் சிறாா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதேபோல, அழியாநிலையிலுள்ள நமது இல்லத்தில் இருக்கும் ஆதரவற்றோருக்கும் இப்பொருள்கள் வழங்கப்பட்டன. மாவட்ட செஞ்சிலுவை சங்கச் செயலா் ஜெ. ராஜாமுகமது, இணைச் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் ஆகியோா் இவற்றை வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →