புதுகையில் மேலும் 7 பேருக்கு கரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் , மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,342 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 14 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,115 ஆக உயா்ந்துள்ளது.
புதிய உயிரிழப்பு இல்லை. இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 154 ஆகத் தொடா்கிறது.
தற்போது மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை திங்கள்கிழமை பகல் நிலவரப்படி 73 ஆகக் குறைந்துள்ளது.