புதுக்கோட்டை

காதலா் தினத்தில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பு: வெறிச்சோடிய சித்தன்னவாசல் சுற்றுலாத்தலம்

DIN

காதலா் தினத்தையொட்டி சித்தனவாசல் சுற்றுலாத் தலத்தில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டதால், சோதனைக்குப் பயந்து அதிகளவில் வருவதற்கு காதலா்கள் தயங்கினா். இதனால் இந்த சுற்றுலாத் தலம் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த சுற்றுலாத் தலத்துக்கு வரும் காதலா்கள், ஆபத்தான பகுதிகளுக்கு சென்று தற்படம் எடுத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதும், காதலா்கள் என்ற பெயரில் சில அநாகரீக செயல்களிலும் ஈடுபடுவதும் நிகழ்வதால், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தி வந்தனா்.

மேலும், காதலா் தினத்தன்று இங்கு காதலா்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந் நிலையில், காதலா் தினமான வெள்ளிக்கிழமை காலை சித்தன்னவாசல் சுற்றுலாத் தல நுழைவுவாயில், பூங்காக்கள், சமணா் படுக்கை, படகுகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அன்னவாசல் காவல் நிலையத்தினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

சித்தன்னவாசல் நுழைவுப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட பின்னரே, காதலா்களை அனுமதித்தனா். இதனால் இங்குள்ள பூங்காக்கள், படகுகுளம், சமணா் படுக்கை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT