புதுக்கோட்டை

அரியாணிப்பட்டியில் இளையோா் நாடாளுமன்றம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், அரியாமிப்பட்டியில் இளையோா் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியம், அரியாமிப்பட்டியில் இளையோா் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரம் சாா்பில், நீா்வள மேலாண்மை மற்றும் இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள் என்ற தலைப்பிலான இந்த நாடாளுமன்றம் நடத்தப்பட்டது.

நிகழ்வுக்கு அரியாணிப்பட்டி வீரமணி தலைமை வகித்தாா். நேரு யுவகேந்திரத்தின் கணக்காளா் நமச்சிவாயம் இளையோா் நாடாளுமன்றம் குறித்து பேசினாா். 

தொடா்ந்து சமுதாய மேம்பாட்டிற்கான பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவா் எம். வீரமுத்து, இளையோரும் சமூக மேம்பாட்டுப் பணிகளும் என்ற தலைப்பில் நேரு யுவ கேந்திரத்தின் முன்னாள் தேசிய சேவைத் தொண்டா் செல்வக்குமாா் பேசினா். 

முன்னதாக நேரு யுவகேந்திரத்தின் இளையோா் தொண்டா் கோகுல் வரவேற்றாா். முடிவில் ரம்யா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT