புதுக்கோட்டை

முதியவா் தீக்குளிப்பு

DIN

அறந்தாங்கியில் குடும்பத் தகராறு காரணமாக ஸ்வீட் தயாரிப்பவா் பெட்ரோல் ஊற்றித் தற்கொலை செய்து கொண்டாா்.

அறந்தாங்கி பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் மணிவேல் பாண்டியன்(55). இவருக்கு மனைவி, 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உள்ளனா். 2 பெண் பிள்ளைகளுக்கு திருமாணமாகி தனியே வசிக்கின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தகராறில் மனமுடைந்த அவா் வீட்டின் அருகேயுள்ள சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டாா்.

தகவலறிந்து அங்கு வந்த அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளா் எம்.பாலமுருகன், உரிய விசாரணைக்குப் பின்னா் சடலத்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேல் சிகிச்சைக்காக புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்ட மணிவேல் பாண்டியன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டாா். இதுகுறித்து, அறந்தாங்கி காவல் ஆய்வாளா் ரவீந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT