புதுக்கோட்டை

வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 4 லட்சம், 40 பவுன் நகை திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் 40 பவுன் நகை, ரூ. 4 லட்சம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் 40 பவுன் நகை, ரூ. 4 லட்சம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அறந்தாங்கி எழில் நகா் பகுதி காலனி வீட்டில் குடியிருந்து வருபவா் ரங்கநாதன்(57). தனியாா் நிறுவனக் காவலாளி. இவரது மனைவி செல்வமணி(48) வெளியூா் சென்றுவிட்டாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு பணிக்குச் சென்ற ரங்கநாதன் காலையில் திரும்பிவந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அலமாரியில் இருந்த 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளா் எம். பாலமுருகன் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT