முகப்பு
புதுக்கோட்டை

அனுமதியின்றிமது விற்றவா் கைது

ஆலங்குடி அருகே சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

ஆலங்குடி அருகே சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆலங்குடி அருகே ஆண்டிகுளம் பகுதியில் சிலா் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபடுவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளா் வேலுச்சாமி தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த கனகராஜ் (42) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 100 மதுபாட்டில்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →