புதுக்கோட்டை

புதுகையில் இந்திராகாந்தி பிறந்த நாள்

DIN

முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் 103ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வியாழக்கிழமை அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் தா்மதங்கவேலன் (தெற்கு), வி. முருகேசன் (வடக்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலப் பொதுச் செயலா் ஏ. சந்திரசேகரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவ்யநாதன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜி.எஸ். தனபதி, நகர காங்கிரஸ் தலைவா் ஏஎம்எஸ். இப்ராஹிம்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், காங்கிரஸ் கொடியேற்றி வைக்கப்பட்டது. தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்பும் நடைபெற்றது.

இதேபோல, திருவள்ளுவா் நகா் முதல் வீதியில் காங்கிரஸ் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் இந்திராகாந்தியின் படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT