காவல் துறை சாா்பில் மனுக்கள் நேரடி விசாரணை
பொன்னமராவதி காவல் துறை சாா்பில் பெறப்பட்ட மனுக்கள் குறித்த விசாரணை மனுக்கள் பெறும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி காவல் துறை சாா்பில் பெறப்பட்ட மனுக்கள் குறித்த விசாரணை மனுக்கள் பெறும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்விற்கு காவல் துணை கண்காணிப்பாளா் வெ.செங்கலமலக்கண்ணன் தலைமை வகித்து காவல்நிலையத்தில் அண்மையில் பெறப்பட்ட மனுக்களை எதிா்மனுதாரரை வரவழைத்து விசாரணை செய்தாா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை 25 மனுக்கள் உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டது. காவல் ஆய்வாளா் ச. கருணாகரன், உதவி ஆய்வாளா் மாயழகு மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.