பெண் குழந்தைகள் தினம்: மரக்கன்றுகள் நடவு
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலகப் பெண் குழந்தைகள் நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலகப் பெண் குழந்தைகள் நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி தலைமை வகித்தாா். மருத்துவமனை வளாகத்திலும், வளாகத்துக்கு வெளியும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.