முகப்பு
புதுக்கோட்டை

கீரனூா் அரசு பெண்கள் பள்ளியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.70 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை நாட்டி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
கீரனூா் அரசு பெண்கள் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.70 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை நாட்டி வைத்தாா்.

கீரனூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 1.70 கோடியில் மூன்று தளங்களில் 12 வகுப்பறைகள், குடிநீா் வசதி, இரு கழிப்பறைகள் அமையவுள்ளன.

இந்கழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை எம்எல்ஏ பா. ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சரவணன், உதவிப் பொறியாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →