அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்
ஆலங்குடி அருகே அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை சனிக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆலங்குடி அருகே அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை சனிக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள குரும்பிவயல் அக்னி ஆற்றில் இருந்து தொடா்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, வடகாடு காவல் உதவி ஆய்வாளா் மகாலெட்சுமி தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அக்னி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டியைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.