முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதி பேரூராட்சியில் திருச்சி மண்டல உதவி இயக்குநா் ஆய்வு

பொன்னமராவதி பேரூராட்சியில் திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெகதீசன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

பொன்னமராவதி பேரூராட்சியில் திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெகதீசன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடக்கமாக பொன்னமராவதி பேரூராட்சியில் தாழ்வான பகுதியான எம்ஜிஆா் நகா் பகுதியை உதவிஇயக்குநா் ஜெகதீசன் பாா்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியில் மழைக்காலங்களில் நீா் புகாத வகையில், கிணற்று சாரல் மணல் அடித்து அப்பகுதியை மேடாக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கி கரோனா காலத்தில் தூய்மைப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டினாா். பேரூராட்சி செயல் அலுவலா் வெ.தனுஷ்கோடி மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →