புதுக்கோட்டை

வீடு கட்டிய பயனாளிகள் மானியம் கேட்டு தா்னா

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டிய பயனாளிகள் மானியம் கோரி பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கீரமங்கலம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2016-17 ஆம் ஆண்டுக்கான பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வீடு கட்டும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை அவா்களுக்கு மானியத்தொகை வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். மானியத்தொகையை உடனே வழங்கக்கோரி, கீரமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு 15-க்கும் மேற்பட்ட பயனாளிகள் தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களிடம் பேரூராட்சி அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, கோரிக்கை மனுவை பேரூராட்சி அலுவலா்களிடம் வழங்கிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், கீரமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT