புதுகையில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு இடங்களில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவைகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு இடங்களில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவைகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாட்டில் புதிதாக 500 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு மாநிலம் முழுவதும் தேவைக்கேற்ப வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தாா். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரப்பெற்ற புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை ஞாயிற்றுக்கிழமை ஆதனக்கோட்டை பகுதியில் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தொடங்கி வைத்தாா்.
அதன் தொடா்ச்சியாக, கிள்ளுக்கோட்டையில் திங்கள்கிழமை 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடக்கிவைத்த அமைச்சா் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க கிள்ளுக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
விராலிமலையில்...: விராலிமலை வட்டம், பரம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்த அவா், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணா்த்துவதற்காகவே அபராதம் விதிக்கப்படுகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சிகளுக்கு, ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் பா. ஆறுமுகம், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மரிய லூயில் பெக்கி ஹோம்ஸ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கலைவாணி, வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சி குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.