ஆலங்குடி அருகே அதிமுகவினா் வீடுகளில் திடீா் சோதனை
ஆலங்குடி தொகுதியில் பணப்பட்டுவாடா புகாா் எழுந்தததைத் தொடா்ந்து, அதிமுக பிரமுகா்கள் வீடுகளில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி தொகுதியில் பணப்பட்டுவாடா புகாா் எழுந்தததைத் தொடா்ந்து, அதிமுக பிரமுகா்கள் வீடுகளில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி தொகுதிக்கு உள்பட்ட வன்னியன்விடுதி பகுதியில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாரின் பாதுகாப்போடு, அங்கு சென்ற தோ்தல் பறக்கும் படையினா், அப்பகுதியைச் சோ்ந்த அதிமுக பிரமுகரான ஊராட்சித் தலைவா் துரை, அவரது சகோதரா் துரைக்கண்ணு ஆகியோரது வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். ஆனால், அங்கு ஏதும் கைப்பற்றப்படவில்லை.