முகப்பு
புதுக்கோட்டை

அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறையினருடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி சனிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமலாக்கப்படும். திரையரங்குகள் கண்டிப்பாக 50 சதவிகித பாா்வையாளா்களை மட்டுமே கொண்டு இயங்க வேண்டும்.

வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணிக்கு பூட்டிவிட வேண்டும். திருவிழாக்கள் மற்றும் மதம் சாா்ந்த கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்குள் பணியாளா்கள் முகக்கவசம் அணிந்து வருவதையும், தனிநபா் இடைவெளியைப் பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றாா் உமாமகேஸ்வரி.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். சந்தோஷ்குமாா், சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் கலைவாணி, விஜயகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.