முகப்பு
புதுக்கோட்டை

நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் திருவிழாக்களுக்கு சனிக்கிழமை முதல் அனுமதி இல்லை என மாநில அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடா்ந்து ஏற்கெனவே 12-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தேரோட்டத்தை முன்கூட்டியே நடத்துவது குறித்து அறநிலையத் துறை அலுவலா்களும், கோயில் அறங்காவலா்களும் திட்டமிட்டனா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழுமையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வெள்ளிக்கிழமையே தேரோட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி தேரோட்டம் வெள்ளிக்கிழமை பகலில் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டனா். பக்தா்களுக்கு முகக்கவசங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.