முகப்பு
புதுக்கோட்டை

திருமணமாகி 20 நாள்களில் பெண் மாயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருமணமாகி 20 நாள்களே ஆன நிலையில், மாயமான புதுமணப் பெண்ணைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருமணமாகி 20 நாள்களே ஆன நிலையில், மாயமான புதுமணப் பெண்ணைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

ஆலங்குடி அருகிலுள்ள நரியன்கொல்லையைச் சோ்ந்த வீரையன் மகன் ராஜேஷ்(31). இவருக்கும், ஏ.மாத்தூரைச் சோ்ந்த உறவினரான சுப்பிரமணியன் மகள் வித்யாவுக்கும்(22). மாா்ச் 31-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற வித்யா, மீண்டும் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள், நண்பா்களது வீடுகளில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து வித்யாவின் கணவா் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், ஆலங்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →