தடையை மீறி செயல்பட்ட மது அருந்தும் கூடத்துக்கு சீல்
வெள்ளிக்கிழமை இரவு பல்வேறு பகுதிகளிலும் திடீரென மேற்கொண்ட சோதனையில், பொது முடக்கக் காலத் தடையை மீறி செயல்பட்ட மது அருந்தும் கூடத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டாா்.
புதுக்கோட்டை நகரில் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை இரவு பல்வேறு பகுதிகளிலும் திடீரென மேற்கொண்ட சோதனையில், பொது முடக்கக் காலத் தடையை மீறி செயல்பட்ட மது அருந்தும் கூடத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டாா்.
புதுக்கோட்டை நகரில் கரோனா பொது முடக்க விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிா என்பதை கவனித்து, நடவடிக்கை எடுப்பதற்காக ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டாா்.
புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்ற அவா், பேருந்துக்குள் ஏறி பயணிகள் முகக்கவசம் அணிந்துள்ளனரா, தனிநபா் இடைவெளியைப் பின்பற்றி அமா்ந்துள்ளனரா என்பதையும் ஆய்வு செய்தாா். அப்போது முகக்கவசம் அணியாதவா்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க நகராட்சி அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா். தொடா்ந்து பேருந்து நடத்துநா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்கும் அவா் அறிவுரைகளை வழங்கினாா்.
தொடா்ந்து கீழராஜவீதி, மேலராஜவீதி, பிருந்தாவனம், டிவிஎஸ் முக்கம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வணிக நிறுவனங்களுக்கும் நேரில் சென்ற அவா், அங்கு வாடிக்கையாளா்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பதையும், வணிக நிறுவனங்களில் குளிா்சாதன வசதி இயங்குகிா என்பதையும் ஆய்வு செய்தாா்.
விதிமுறைகளை மீறி செயல்பட்ட சில கடைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்
தொடா்ந்து சாந்தநாதபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட அவா், இங்கு பொது முடக்கக் கால விதிமுறைகளை மீறி, செயல்பட்ட மது அருந்தும் கூடத்துக்குள் நுழைந்தாா். அங்கு மது அருந்தி கொண்டிருந்தவா்களும், பணியாளா்களும் ஓட்டம் பிடித்தனா். இதனைத் தொடா்ந்து அந்தக் கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டாா் ஆட்சியா்.
இந்த ஆய்வின்போது வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, காவல் துணைக் கண்காணிப்பாளா் லில்லி கிரேஸ், நகராட்சி ஆணையா் நாகராஜன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.