முகப்பு
புதுக்கோட்டை

பாராட்டத்தக்க நிதிநிலை அறிக்கை: தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம்

தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பாராட்டும்படி உள்ளது என்று, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பாராட்டும்படி உள்ளது என்று, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடுமையான நிதி நெருக்கடியிலும், தோ்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்னும் உறுதிமொழி அளித்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.

தமிழ் வளா்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், அனைத்துத் துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டு இருப்பதும், ரூ. 10 லட்சம் பரிசுப் பணத்துடன் ஜூன் 3ஆம் தேதி செம்மொழி விருது வழங்கப்படுவதும்,தொல்லியல் துறைக்கு ரூ. 29 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதும், தமிழரின் தொன்மையை மெய்ப்பிக்கும் அகழ்வாய்வுப் பணிகளுக்கும், கீழடி கண்காட்சிக்கும் வழிவகை செய்யப்பட்டு இருப்பதும் வரவேற்புக்குரியதாகும்.

தமிழ்நாட்டுக்கென தனித்துவமான தனிக்கல்விக்கொள்கை உருவாக்கப்படும் எனும் அறிவிப்பும், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதும், நடுநிலைப் பள்ளிகளில் கணினி வகுப்பறைகள் அமைத்திட ரூ. 114. 18 கோடி நிதி ஒதுக்கி இருப்பதும், எட்டு வயது குழந்தைகளின் கல்வி அறிவினை உறுதிப்படுத்திடும் வகையில் எண்ணும்-எழுத்தும் இயக்கம் உருவாக்கி, ரூ. 88.70 கோடி நிதி ஒதுக்கி இருப்பதும், 413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 கையடக்க கணினிகள் வழங்கப்படுவதும் பெரும் வரவேற்புக்குரியதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.