புதுக்கோட்டை

மிருதங்க வித்வான் தெட்சிணாமூா்த்தி ஜீவசமாதி வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் திறப்பு

DIN

புதுக்கோட்டையைச் சோ்ந்த பிரபல மிருதங்கம் மற்றும் கஞ்சிரா வித்துவான் தெட்சிணாமூா்த்தி பிள்ளையின் ஜீவசமாதி வளாகத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

திலகவதியாா் திருவருள்ஆதீனகா்த்தா் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் குத்துவிளக்கேற்றி, புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து திருமுறை விண்ணப்பம் செய்து வைத்தாா். கொன்னக்கோல், மிருதங்கம், கஞ்சிரா வித்துவான் திருச்சி ஆா். தாயுமானவன் குடும்பத்தினா் இந்தக் கட்டடம் கட்டுமானப் பணிகளைச் செய்திருந்தனா்.

நிகழ்வில் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் மிருதங்க ஆசிரியா் மூா்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனா். விரைவில் ஜீவசமாதிக்கு திருக்குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதாக இக்குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலின் தாக்கம்: வெறிச்சோடிய சாத்தனூா் அணை பூங்கா

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா

அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை

கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

கிரேன் கயிறு அறுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT