புதுகையில் 24 மணி நேர கரோனா தடுப்பூசி மையம்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா தடுப்பூசி மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா தடுப்பூசி மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி தொடங்கி வைத்தாா். அனைத்துத் துறை பேராசிரியா்களும் செவிலியா்களும் இதில் கலந்து கொண்டனா்.
பொதுமக்கள் இந்த மையத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வா் மு. பூவதி கேட்டுக் கொண்டுள்ளாா்.